அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றியதற்கு எதிராக சிபிஎம் தொடர்ந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வைத்துள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஎம் மேல்முறையீடு செய்திருந்தது.
இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் மேல்முறையீட்டு மனுவை ஏற்று, வழக்கினை இரண்டிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் மு.ராஜசேகர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உத்தரவில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்காமல் பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவு இயற்கை நீதிக்கு புறம்பானது என்றும், ஏற்கனவே அனுமதி வாங்கி வைக்கப்பட்ட கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டுமெனப் பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு உகந்ததாக இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.